மரநடுகையை ஊக்குவித்தஅம்பாறை ஆலையடிவேம்புபிரதேச செயலகத்தின்முன்மாதிரி

0
101

தேசிய சுற்றுச் சூழல் வாரத்தினை முன்னிட்டு அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின்; ஏற்பாட்டில் பாடசாலைகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பொது
அமைப்புக்களுக்கு மரக்கன்றுகள் இன்று வழங்கப்பட்டன.


ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் பிரதேச செயலக சுற்றச்சூழல் அபிவிருத்தி உத்தியோகத்தர் யு.எல்.மக்மூதா மற்றும் எஸ்.ஜனனி ஆகியோரின் நிகழ்வு நடைபெற்றது. பொது சுகாதார வைத்திய அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், பொது அமைப்பினர், ஆலையடிவேம்பு பிரதேச சபை ஊழியர்கள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.