மருதானை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தோல்வியில் முடிந்தது

0
14

மருதானைஇ கோவில்வத்த பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
எனினும் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தோல்வியடைந்துள்ளது. மருதானை, கோவில்வத்த பகுதியில் வீட்டிலிருந்த நபர் ஒருவர் மீது, உந்துருளியில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இருவர் குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்த முற்பட்டுள்ளனர்.

எனினும் துப்பாக்கி வெடிக்காத காரணத்தால் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தோல்வியடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.