மலையக எழுச்சிப் பேரணிக்கு அதரவு, புதுக்குடியிருப்பில் இருந்து பேரணி

0
203

‘வேர்களை மீட்டு உரிமைகளை வென்றிட’ மலையக நடை பயணத்திற்கு ஆதரவாக, நேற்று முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் ஆரம்பமான நடைபயணம், இன்று கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கிப் புறப்பட்டது.

தலைமன்னார் தொடக்கம் மாத்தளை வரையான நடை பயணத்தில், நாளையதினம் இணைந்துகொள்ளும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடை பயணம் மதவாச்சியில் பிரதான நடை பயணத்துடன் இணைந்துகொள்ளவுள்ளது.

கிளிநொச்சி நடைபயணத்தில் ஏற்பாட்டாளர்களுடன் சிவில் சமூக பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியில் கட்சிகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.