27.8 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மழை பெய்தாலும் நீர்த்தேக்கங்கள் நிரம்பவில்லை

நாட்டின் சில பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்து வருகின்ற போதிலும், நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு இதுவரை அதிகரிக்கவில்லை என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள 73 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு சுமார் 8 இலட்சம் ஏக்கர் அடி என நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் சுதர்ஷனி விதானபத்திரன தெரிவித்தார்.
மேலும், பல ஆண்டுகளாக நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்த நாட்களில் இருக்க வேண்டிய சராசரி நீர் கொள்ளளவை விட தற்போது நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 3% குறைவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles