மாகாண சபை தேர்தலை நடத்துமாறு வெளிவிவகார அமைச்ருடனான சந்திப்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர் விக்ரோறியா நூலண்ட் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை வந்துள்ள திருமதி நூலண்ட் நேற்று வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸை சந்தித்துக் கலந்துரையாடினார். அதன் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர்,
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த நடவடிக்கையை வரவேற்பதாகவும் கூறினார்.
மிகவும் கடினமான மற்றும் முக்கிய தருணத்தில் தாம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகவும் இந்த தருணத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி பெற இலங்கை அரசாங்கம் எடுத்த முடிவு துணிச்சலான நடவடிக்கை எனவும் கூறினார்.