மாத்தறை மிதிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொவியாபான பிரதேசத்தில் மீன் விற்பனை நிலையமொன்றில் நேற்றுக் காலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்தனர்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட போது திகரெத்த மற்றும் ஹாதபெலேன பிரதேசங்களில் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கோட்டை மற்றும் அகுலுகஹா பிரதேசங்களை சேர்ந்த 38 மற்றும் 30 வயதான இருவரும் கைது செய்யப்பட்டதுடன் சந்தேக நபர்களிடம் இருந்து 11 கிராம் 500 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் முச்சக்கரவண்டி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.