மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் யாழ் மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடத்த தகவலின் படி யாழ் மாவட்ட குற்றதடுப்புபிரிவினரால் கைதுசெய்யபட்டுள்ளார்.
இன்று அதிகாலை 5.00மணியளவில் யாழ்மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மானிப்பாய், சங்கானை சேச்விதியில்
சட்ட விரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு அதனை விற்பனைக்காக கொண்டு சென்ற 41 வயதுடைய நபர் ஒருவரை மாவட்ட புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதோடு அவரிடமிருந்து 15லீற்றர் கசிப்பும் அதனை உற்பத்தி செய்ய பயன்படுத்திய பொருட்களும் கசிப்பினை கொண்டு சென்ற மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதோடு.
கைது செய்யப்பட்டவர்மேலதிக விசாரணைக்காக யாழ்மாவட்ட விஷேட குற்ற தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.