கம்பளை – அங்குருமுல்ல பிரதேசத்தில், மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வேறொருவரின் காணியில் அத்துமீறி நுழைந்து மிளகு பறிக்கச் சென்ற வேளையில், காணியைச் சுற்றியிருந்த அனுமதியற்ற மின்சார கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக, கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த காணியின் உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்