குருணாகல் மஹவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உக்வத்தேகம பிரதேசத்தில், கோழி பண்ணையொன்றை சுற்றி அமைக்கப்பட்ட மின்சார வேலியில் மோதுண்டு 57 வயது நபர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மெதகம பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரேதப் பரிசோதனைக்காக மஹவ வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.