மின்சார கட்டண உயர்வுக்கு எதிராக இன்று இரவு 7 மணிக்கு அனைத்து மின்விளக்குகளையும் அணைக்குமாறு மக்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் பொது மக்களை கேட்டுள்ளது.
இது தொடர்பில் மக்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் அழைப்பாளர் அனுருத்த சோமதுங்க கருத்து தெரிவிக்கையில்,
இன்று இரவு 7 மணிக்கு, பிரதான ஆளி மூலம் உங்கள் வீட்டின் மின் கட்டமைப்பை அணைக்கவும்.
மின் விளக்குகள், மின்சாதனங்களைப் பயன்படுத்துவதை நிறுத்தவும். உங்கள் வீட்டு மின் விளக்குகளை அணைக்கவும்.
இதன் விளைவை அடையாளபூர்வமாக பிரபலப்படுத்துவோம் என தெரிவித்தார்.