நாகொட ஹொரன்கல்ல பிரதேசத்தில் மின்சார வேலியில் சிக்குண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று, நாகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் தல்கஸ்வ ஹொரன்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயது நபர் உயிரிழந்துள்ளதுடன் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயது நபர் காயமடைந்துள்ளார்.
விலங்குகளை வேட்டையாடுவதற்காக விவசாயக் காணியொன்றில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்குண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.