மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

0
96

நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பில் இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, இன்று(1) முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 2 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி,A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V ,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பகலில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் மின்சாரம் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.