மின் உற்பத்தி இயந்திரங்களின் பெற்றரிகளை திருடிய தனியார் பஸ் நடத்துநர் கைது!

0
172

கொழும்பை சூழவுள்ள பல்பொருள் விற்பனை நிலையங்களின் மின் உற்பத்தி இயந்திரங்களில் பொருத்தப்பட்ட பெற்றரிகளை திருடும் தனியார் பஸ் நடத்துநர் ஒருவர் இன்று கைதுசெய்யப்பட்டதாக கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான 10 பெற்றரிகள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொழும்பை சூழவுள்ள பல்பொருள் விற்பனை  நிலையங்களின் மின் உற்பத்தி இயந்திரங்களில் பொருத்தப்பட்ட மின்கலங்களை திருடுவது  தொடர்பில் பல பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இது தொடர்பில் கொழும்பு தெற்கு பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹசந்த மாரப்பன, பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றுமொரு விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.