மின் கட்டணம் குறித்த பிரேரணை நாளை அமைச்சரவையில் சமர்ப்பிப்பு

0
137

ஜனவரி மாதம் மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான பிரேரணை நாளை திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இதேவேளை ஜனவரி மாதம் குறித்த சட்டமூலத்தில் புதிய கட்டணம் சேர்க்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
அத்துடன் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்ததன் பின்னர் அது பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.