மின் கட்டண அதிகரிப்பு – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

0
91

மின் கட்டண திருத்தம் தொடர்பில் யோசனையொன்று தமது ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் அறிக்கை பொய்யானது என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  

அறிக்கையொன்றை வெளியிட்டு அந்த ஆணைக்குழு இவ்வாறு தெரிவித்துள்ளது.

அவ்வாறான யோசனையொன்று இலங்கை மின்சாரசபையினால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளதாக ஒருசில ஊடகங்கள் செய்தி வெளியிடப்பட்டிருந்தாலும் இன்று (08) வரையில் அவ்வாறான யோசனையும் தமது ஆணைக்குழுவுக்கு கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.