நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மியான்மாருக்கு ஏற்கெனவே 60 தொன் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பியுள்ள நிலையில், மேலும் 40 தொன் நிவாரணப் பொருட்களைக் கடற்படைக் கப்பல்கள் மூலம் அனுப்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மியான்மாரில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த நிலநடுக்கத்தால் 1,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு ஏராளமான கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் ‘ஆப்ரேஷன் பிரம்மா’ திட்டத்தின் ஒரு பகுதியாக மீட்பு மற்றும் நிவாரணப் பொருட்களை அனுப்பி, மியான்மார் மக்களுடன் இந்தியா துணை நிற்கும் என பிரதமா் நரேந்திர மோடி உறுதியளித்தார்.
அதன்படி, மியான்மாருக்கு 5 இராணுவ விமானங்களில் நிவாரணப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மீட்புக் குழுக்களை இந்தியா அனுப்பியுள்ளது.
இதேவேளை இந்திய கடற்படைக் கப்பல்களான ‘ஐ.என்.எஸ் .சத்புரா’ மற்றும் ‘ஐ.என்.எஸ். சாவித்ரி’ மூலம் மியான்மாருக்கு மேலும் 40 தொன் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட உள்ளன.