28.4 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மீள்வலுசக்தி திட்டத்திற்காக அதானி இலஞ்சம் வழங்கினாரா? –

இந்தியாவின் ஆதானி குழுமங்களின் தலைவர் கவுதம் அதானி இலஞ்சம்வழங்கினாரா என்பது குறித்து அமெரிக்கா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கவுதம அதானியின் நிறுவனம் இலஞ்சம் வழங்கும்; நடவடிக்கைகளில் ஈடுபட்டதா என்பது குறித்தும் அந்த நிறுவனத்தின் ஸ்தாபகர் கவுதம் அதானியின் நடவடிக்கைகள் குறித்தும் அமெரிக்கா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

எரிசக்தி திட்டமொன்மொன்றிற்காக இந்திய அதிகாரிகளிற்கு கவுதம் அதானியின் நிறுவனம் அல்லது அதனுடன் தொடர்புட்டவர்கள் இலஞ்சம் வழங்கினார்களா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன.

இந்தியாவின் மீளவலுசக்தி நிறுவனமான அசுரே பவர் குறித்தே விசாரணைகள் இடம்பெறுகின்றன.இதேவேளை எங்களுக்கு விசாரணைகள் குறித்து எதுவும் தெரியாது என கௌதம்  அதானி மின்னஞ்சல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எங்கள் வர்த்தக குழுமம் உயர் தராதரங்களின் அடிப்படையில் செயற்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles