முச்சக்கரவண்டியால் 13 பேர் வைத்தியசாலையில்…

0
171

மாபலகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று நாகொட கல்அஸ்ஸ பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் 13 பேர் காயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் முச்சக்கரவண்டி ஒன்று திடீரென திரும்ப முற்பட்டதில் பஸ் வீதியை விட்டு விலகி சுவரில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் சுமார் 60 பேர் பஸ்ஸில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.