முச்சக்கர வண்டியிலிருந்து சடலம் மீட்பு!

0
272

பெந்தோட்டை கடற்கரைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்றின் பின்புற ஆசனத்திலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து, குறித்த சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் 40 அல்லது 45 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெந்தோட்டை கடற்கரைக்கு அருகில் தொடருந்து பாதைக்கு அண்மையில் உள்ள காட்டுப் பகுதியில் இந்த முச்சக்கரவண்டி நிறுத்தப்பட்டிருந்ததாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.