முன்னாள் கால்பந்து வீரருக்கு நான்கரை ஆண்டுகள் சிறை

0
98

பார்சிலோனா நைட் கிளப்பில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முன்னாள் பார்சிலோனா மற்றும் பிரேசில் கால்பந்து வீரர் டானி ஆல்வ்ஸ் குற்றவாளி என ஸ்பெயின் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆல்வ்ஸுக்கு நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் மிகவும் அலங்கரிக்கப்பட்ட கால்பந்து வீரர்களில் ஒருவரான 40 வயதான ஆல்வ்ஸ் மீது, கடந்த 31 டிசம்பர் 2022 அதிகாலையில் குறித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததை மறுத்தார்.

அவரை விடுவிக்க வேண்டும் என்றும், ஆல்வ்ஸ் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவரது வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.

இரவு விடுதியின் ஒரு விஐபி பிரிவில் உள்ள கழிப்பறைக்கு அந்த பெண்ணை கவர்ந்திழுத்ததாக ஆல்வ்ஸ் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அறிக்கையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியத்தைத் தவிர, அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை நிரூபிக்கும் ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது.