முன்னாள் (டிஐஜி) பிரியந்த ஜெயக்கொடிக்கு பிணை!

0
4

ஓய்வுபெற்ற முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்பிரியந்த ஜெயக்கொடிக்கு மஹர நிதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த குற்றவாளியான கெஹல்பத்தர பத்மே தனக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் பொலிஸாரிடம் அளித்த பொய்யான முறைப்பாடை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பிரியந்த ஜெயக்கொடியை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நடத்திய விசாரணையில்  பிரியந்த ஜெயக்கொடி தனது தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் பொய்யாக முறைப்பாடு அளித்துள்ளமை தெரியவந்துள்ளது.