முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா, விளக்கமறியலில்

0
125

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவை, எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற, வீதி விபத்து தொடர்பான வழக்கு ஒன்றின் சாட்சியாளரை அச்சுறுத்திய சம்பவம் மற்றும் விபத்து தொடர்பான வழக்கில் ஆஜராகாத சம்பவத்தை அடுத்தே, உயர் நீதிமன்றம், ஸ்ரீரங்காவை கைது செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.

அந்தவகையில், கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதி, களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவேளை, அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.