முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்!

0
149

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை இந்தக் கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நேற்று முன்தினம் பசில் ராஜபக்ஷவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையே தொலைபேசி வாயிலாக கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.