முல்லைத்தீவு மாவட்ட செயலக பல்நோக்கு அபிவிருத்தி செயலணி பிரிவினரின் ஏற்பாட்டில் ‘எமது அலுவலகத்தை சுத்தமாக வைத்திருப்போம்’ எனும் தொனிப்பொருளில் சிரமதான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.முல்லைத்தீவு மாவட்ட செயலக பல்நோக்கு அபிவிருத்தி செயலணி பிரிவின் உதவிப்பணிப்பாளர் கப்டன் ஐ.சசிக்குமார் தலைமையில் இடம்பெற்ற குறித்த சிரமதானப் பணியின் அரம்ப நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் காணி எஸ்.குணபாலன், உள்ளகக்கணக்காய்வாளரும் உற்பத்தித்திறன் பிரிவின் பிரதம இணைப்பாளருமான கே.லிங்கேஸ்வரன், நிர்வாக உத்தியோகத்தர் திருமதி சு.விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன்போது மாவட்ட செயலகத்தின் முன்பக்க வீதியின் ஒரங்கள் மற்றும் கிளைகளுக்கென அமைக்கப்பட்டுள்ள தோட்டப்பகுதிகளில் மேற்கொள்ளப்படவேண்டிய சுத்திகரிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் இதன்பின்னர் கலந்துகொண்ட பல்நோக்கு அபிவிருத்தி செயலணி பிரிவின் துணுக்காய், ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச செயலகங்களைச் சேர்ந்த 32 உத்தியோகத்தர்களுக்கு உற்பத்தித்திறன் தொடர்பான செயலமர்வும் இடம்பெற்றது.