முல்லை. புதுக்குடியிருப்பில் யுக்திய சோதனை நடவடிக்கை – 7 பேர் கைது!

0
117

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் பல குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நடாத்திய யுக்திய சுற்றிவளைப்பில் பல குற்றங்களுடன் தொடர்புபடைய 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 9ஆம்,10ஆம் வட்டார பகுதிகளில் இன்று காலை 5 மணி முதல் ஆறு மணி வரை நடாத்தப்பட்ட சுற்றிவளைப்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவர் உட்பட 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், 43 லீற்றர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது.