2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போரின் போது கொல்லப்பட்ட தமிழ் பொதுமக்களை நினைவுகூரும் வகையில் வெள்ளவத்தையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொது ஒன்றுகூடலின் போது இன்று (மே 18) காலை பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிகழ்வு அலெக்ஸாண்ட்ரா வீதிக்கு எதிரே உள்ள கடற்கரைக்கு அருகில் நடைபெற்றது, அங்கு மோதலின் இறுதிக் கட்டத்தின் போது இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் அல்லது காணாமல் போனவர்களை நினைவுகூரும் வகையில் வெள்ளை மலர்களுடன் பங்கேற்பாளர்கள் கூடியிருந்தனர்.
மற்றொரு குழு ஒன்றுகூடலை சீர்குலைக்க முயன்றதாகக் கூறப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் பொலிஸார் இருந்ததாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட குழுவை கலைக்க பொலிஸார் முயற்சிப்பதையும் நிகழ்நிலையில் சம்பவம் குறித்து பகிரப்பட்ட காணொளி காட்டுகிறது.