மூத்த ஊடகவியலாளர் இ.பாரதிக்கு இறுதி அஞ்சலி

0
50

மறைந்த மூத்த ஊடகவியலாளர் பாரதிக்கு இன்று இறுதி அஞ்சலி இடம்பெற்று, இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன.

தமிழ் ஊடக பரப்பில் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக ஊடக அனுபவத்தை கொண்ட மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி உடல் நலகுறைவு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார்.

இந்தநிலையில், யாழ்ப்பாணம் – பலாலி வீதி திருநெல்வேலியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் புகழுடல் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

அவரது புகழுடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், ஊடக நிறுவன ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பட்டாளர்கள், பொது மக்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

ஒருவர் எவ்வாறு வாழ்ந்தார் என்பதன் அர்த்தம் அவரது இறுதி நிகழ்வில் தெரியும், அதற்கு எடுத்துக்காட்டாக மூத்த ஊடகவியலாளர் பாரதியின் இழப்பு சுட்டி நிற்கின்றது என மறைந்த மூத்த ஊடகவியலாளர் பாரதியை, ஊடகப் புலத்துடன் அரசியல் புலமும் நினைவு கூர்ந்து அஞ்சலித்தது.

இதன்போது அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன.