மேர்வின் சில்வா உள்ளிட்ட நால்வருக்குத் தொடர்ந்தும் விளக்கமறியல்

0
3

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட நால்வரை எதிர்வரும் மே 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மஹர நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கிரிபத்கொட பகுதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியொன்றைப் போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த சம்பவம் தொடர்பாகக் குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.