மேற்கு ஆசிய நாடுகளில் போர்ப் பதற்றம்!

0
41

ஈரானின் இராணுவ நிலைகளைக் குறிவைத்து துல்லியமான தாக்குதல்களை தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் இராணுவம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ‘ஈரானிலிருந்து இஸ்ரேல் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு பதிலடி நடவடிக்கையாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஈரானில் உள்ள இராணுவ நிலைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே போரை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு ஈரான் இராணுவத்திற்கு அந்நாட்டின் உயர் தலைவர் அயட்டோலா அலி காமேனி அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே பலத்த சத்தத்துடன் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மீண்டும் மேற்கு ஆசிய நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.