ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெத ஆராய்ச்சியின் சகோதரர் நிஹால் வெத ஆராச்சி, தங்காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு அருகில், கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை தொடர்பில், நிஹால் வெத ஆராச்சி கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
நிஹால் வெத ஆராச்சி, தென் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆவார்.