ரஷ்ய தலைநகரான மொஸ்கோ மற்றும் கொழும்புக்கு இடையிலான விமான சேவையை, மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ரஷ்ய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அடுத்த மாத நடுப்பகுதியில், இந்த விமான சேவையை மீள ஆரம்பிக்க ரஷ்யா தயாராகவுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், நீதிமன்ற உத்தரவுக்கமைய, ரஷ்யாவின் எரோபுளொட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்று, நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. அந்த சம்பவத்தின் பின்னர், கொழும்புக்கான விமான சேவைகளை நிறுத்துவதற்கு, எரோபுளொட் நிறுவனம் தீர்மானித்திருந்தது. குறித்த நிறுவனத்தின் விமானத்தை, அவ்வாறு தடுத்து வைத்திருந்தமை, பாரிய தவறாகும். இந்த சம்பவம் தொடர்பில், இலங்கை அதிகாரிகள் மன்னிப்பு கோரியுள்ளனர். இவ்வாறானதொரு சம்பவம், மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம், உரிய நடவடிக்கைகளை எடுக்கும். என அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.