மோட்டார் சைக்களில், அணைக்கட்டின் துரிசுஊடாக பயணிக்க முயன்றவர், ஆற்றில் வீழ்ந்து உயிரிழந்தார்!

0
59

அம்பாறை நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டப்பளம் ஆலயடிக்கட்டு பகுதியில், மோட்டார் சைக்களில் அணைக்கட்டின் துரிசு ஊடாக பயணித்த நபர், ஆற்று நீரில் வீழ்ந்து, உயிரிழந்துள்ளார். ஆலயடிக்கட்டு பகுதியில் ஆற்று நீரை ஊடறுத்துக் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டின் துரிசு ஊடாக பயணிக்க முற்பட்டவேளையே அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த நபர் வெளிநாட்டில் பணியாற்றுபவர் என்றும், விடுமுறைக்காக ஊருக்குத் திரும்பியிருந்த நிலையில், மனைவி மற்றும் பிள்ளையுடன், ஆலயடிக்கட்டுப் பகுதிக்கு நேற்று மாலை வருகை தந்துள்ளார்.

மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டுவிட்டு, தனியே துரிசு ஊடாக மோட்டார் சைக்கிளை இவர் செலுத்திச் செல்ல முயன்றமை, பொலிஸாரின் விசாரணைகளில்தெரியவந்துள்ளது. நீண்ட நேர தேடுதல்களின் பின்னரே குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
32 வயதுடைய அப்துல் லத்தீப் இக்ராம் என்பவரே உயிரிழந்த நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிந்தவூர்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.