மோதர துப்பாக்கிச் சூடு: இளைஞர் உட்பட இருவர் கைது

0
81
அண்மையில் மோதர, லெல்லம பிரதேசத்தில் பதிவாகிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவிய இளைஞர் உட்பட இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பெப்ரவரி 13, 2024 அன்று மோட்டார் சைக்கிளில் வந்த இரு சந்தேக நபர்கள் ஒருவரை சுட்டுக் கொன்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய இரு சந்தேக நபர்களை கொழும்பு சேதுவத்தை களுபாலம மற்றும் பெர்குசன் வீதியில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 16 மற்றும் 21 வயதுடையவர்கள் மற்றும் கொழும்பு 15 வசிப்பவர்கள். ஒரு சந்தேகநபர் கைது செய்யப்படும் போது 4.45 கிராம் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மோதர பொலிஸார் மற்றும் சிசிடியினர் மேற்கொண்டு வருகின்றனர்