யாழில் மலையகத்தை உணர்வோம்’ என்ற தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கண்காட்சி ஆரம்பம் !

0
144

யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் கண்காட்சி நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.
மலையகம் -200, ‘யாழில் மலையகத்தை உணர்வோம்’ என்ற தொனிப்பொருளில் சிவில் சமூக நிறுவனங்களின் ஏற்பாட்டில் 4 நாட்கள் கண்காட்சி முன்னெடுக்கப்படுகின்றது.
இன்று முதல் எதிர்வரும் டிசெம்பர் 3 ஆம் திகதி வரை கண்காட்சி இடம்பெறவுள்ளது.
கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
இன்றைய ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் குயின்ரஸ் கலந்து கொண்டிருந்தார்.
4 நாட்கள் கண்காட்சியில் சிறுவர் நாடகங்கள், டிஜிட்டல் ஆவணக் கண்காட்சி, ஆவணப்பட திரையிடல், மலையக வாழ்வியல் பகிர்வுகள், போன்றவை காட்சிப்படுத்தப்படுகின்றன.