யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மழைநீரை சேமிப்பதற்காக 934 தாங்கிகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மழைநீரை சேமிக்கக்கூடிய 3,000 தாங்கிகளை நிர்மாணிக்க இந்திய அரசாங்கத்துடன் 2016 ஆம் ஆண்டு ஒப்பந்தமொன்று கைச்சாத்தானது.
இந்தத் திட்டத்தினை 3 வருடங்களில் நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்பட்ட போதிலும் நிதி மற்றும் தொழில்நுட்ப பிரச்சினைகளால் இந்த வருடம் ஜூன் மாதம் வரை அதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டது.இந்தநிலையில், அவ்வேலைத்திட்டத்தின் கீழ் எஞ்சியுள்ள நிதியில் 934 கிணறுகளை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.