யாழில் மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது

0
148

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் மூன்று மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில், ஆசிரியரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெல்லிப்பழை மகாஐனா கல்லூரியில் ஆசிரியர் ஒருவரால் மூன்று மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், இருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிலையில், குறித்த ஆசிரியர் தெல்லிப்பழை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.