யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதுவர் – வடக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு

0
146

யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸை, இன்று சந்தித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள, வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், இச் சந்திப்பு இடம்பெற்றது.

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் மக்களின் தேவைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில், ஆளுநர் தெளிவுப்படுத்தினார்.

அதற்கமைய, வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு, இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு தொடர்ச்சியாக கிடைக்கும் என, யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி தெரிவித்தார்.

அத்துடன், இளைஞர், யுவதிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சிகளை பெற்றுக் கொடுக்கவும், தீவுகளுக்கான படகு சேவையை விஸ்தரிக்கவும் நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.

சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கான வசதிகளை ஒழுங்கு செய்வதுடன், தரை மற்றும் கரையோர தூய்மை திட்டத்திற்கு தேவையான பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தெரிவித்த, யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர், தூய்மை திட்டத்திற்கு தேவையான நிதியை, இந்திய துணை தூதரகத்தில் இருந்து ஒதுக்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.