யாழ்ப்பாணம் நகர் பகுதியில், காங்கேசன்துறை வீதிக்கு அருகாமையில் உள்ள, பிரபல ஆண்கள் கல்லூரியில், ஆசிரியர் ஒருவர், மாணவனை தாக்கிய நிலையில், மாணவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம், இன்று இடம்பெற்றுள்ளது. தரம் 10 ஏ வகுப்பில் கல்வி கற்கும் மாணவனை, தடிகளால் பலமுறை தாக்கிய ஆசிரியர், தடி முறிந்த நிலையில், தனது கையால், மாணவனின் நெற்றியில் அறைந்துள்ளார். அதனையடுத்து, தாக்குதலுக்கு இலக்கான மாணவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில், கல்லூரி அதிபரை தொடர்புகொண்டு கேட்ட போது, சம்பவம் தொடர்பில் தான் அறியவில்லை எனவும், மேலதிக விடயங்களை ஆராய்வதாகவும்தெரிவித்தார்.
Home வடக்கு செய்திகள் யாழ்ப்பாணம் நகர் பகுதியில், பிரபல ஆண்கள் கல்லூரியில், ஆசிரியர் ஒருவர், மாணவன் மீது தாக்குதல்!