யாழ்ப்பாணம் கரவெட்டி நெல்லியடி நாவலர்மடம் பகுதியில், இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில், 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற வர்த்தக நடவடிக்கைகளுக்கான கன்ரர் ரக வாகனமும், நெல்லியடி பகுதியில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்றுகொண்டிருந்த ஹயஸ் ரக வாகனமும் மோதி, விபத்து சம்பவித்துள்ளது.
கன்ரர் ரக வாகன சாரதி, முன்னால் திடீரென திரும்பிய கார் ஒன்றை காப்பாற்ற முற்பட்டு, தனது பக்கத்தில் இருந்து எதிர் பக்கம் நோக்கி தனது வாகனத்தை செலுத்திய வேளை, பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த ஹயஸ் வாகனம் மோதியது.
இதனால், ஹயஸ் வாகனத்தில் வந்த மூவரும், கன்ரர் வாகனத்தை செலுத்தி வந்த சாரதியும் காயமடைந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், வெளிநாட்டில் இருந்து வருகை தந்த இலங்கையர்களான அஸ்ரிபன் அடினா, அஸ்ரிபன் சாரங்கா, அன்ரனி ஜொக்சன் பென்னாண்டோ ஆகியோரும்,
அம்பிகைபாலன் செந்தூரன் எனும் கன்ரர் வாகன சாரதியும் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், நெல்லியடி பொலிசார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.