யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவனில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு

0
101

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில், இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிறிய ரக உழவு இயந்திரத்தில், தோட்டத்தில் இருந்து புற்களைளை ஏற்றிக் கொண்டிருந்த விவசாயி மீது, பாரவூர்தி மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
பலாலியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பாரவூர்தி, வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விபத்திற்குள்ளானது.

சம்பவத்தின் போது, பாரவூர்தி சாரதி உட்பட மூவர் மதுபோதையில் இருந்ததாகவும், இதனால், வீதியில் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக உழவு இயந்திரத்துடன் மோதியதில் விபத்து சம்பவித்ததாகவும், ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தினால், வீதி அருகில் இருந்த மின் கம்பம், தொலைத்தொடர்பு கம்பம் என்பன முற்றாக உடைந்து சேதமடைந்துள்ளதுடன், பாரிய மரம் ஒன்றும் முறிந்து விழுந்துள்ளது.

இந்த சம்பவத்தில், ஈவினை கிழக்கு புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த, 65 வயதான சீனியர் இராஜன் என்பவர், பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், சுன்னாகம் பொலிசார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.