யாழ்ப்பாணம் வரும் ஒவ்வொரு ரயிலுக்கும் ரூ. 10 இலட்சம் நட்டமாம்!

0
146

யாழ்ப்பாணத்துக்கான தொடருந்து சேவையால் ஒவ்வொரு ரயிலுக்கும் 3 இலட்சம் ரூபாய் அரசுக்கு நட்டம் ஏற்படுகிறது என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை பாராளுமன்றில் உரையாற்றிய அவர்,

புகையிரதக் கட்டணத்தை பஸ் கட்டணத்தில் பாதியாகக் கொண்ட பொதுக் கொள்கை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடப்படுகிறது. இவ்வாறான பொதுவான கொள்கை வகுக்கப்படாவிட்டால், சேவையில் ஈடுபடும் தொடருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

டீசல் விலை உயர்வால் தொடருந்து கட்டணமும் உயர்ந்துள்ளது. டீசல் விலை அதிகமாக இருப்பதால் புகையிரதத்தை இயக்குவதற்கான கட்டணமும் அதிகம். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரை ஒரு புகையிரதத்தை இயக்குவதற்கு சுமார் 13 இலட்சம் ரூபாய் செலவாகும். அந்தப் புகையிரதத்தில் சுமார் 500 பயணிகள் பயணித்தாலும் 10 இலட்சம் ரூபாயே வருமானம் கிடைக்கிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி, யாழ்ப்பாணம் செல்லும் ஒவ்வொரு புகையிரதத்தின் மூலமும் 3 இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்படுகிறது – என்றார்.

கொழும்பு மாவட்ட பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் பந்துல குணவர்த்தன இதனைத் தெரிவித்தார்.