யாழ். கலாசார மத்திய நிலையம் : மீண்டும் பெயர் மாற்றம்!

0
30

இந்திய நிதியுதவியில் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்ட யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையம் அண்மையில், ‘திருவள்ளுவர் கலாசார மையம்’ என பெயர் மாற்றப்பட்ட நிலையில், தற்போது ‘யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்’ என பெயர்ப் பலகை பொருத்தப்பட்டுள்ளது.

கடந்த 18ஆம் திகதி இலங்கையின் பிரதி கலாசார அமைச்சர் மற்றும் இலங்கைக்கான இந்திய தூதுவர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் குறித்த கட்டத்திற்கு திருவள்ளுவர் கலாசார மையம் என பெயர் சூட்டி பெயர் பலகையை திறந்து வைத்திருந்தனர்.

‘யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம்’ என்ற பெயர் மாற்றப்பட்டு, ‘திருவள்ளுவர் கலாசார மையம்’ என பெயர் சூட்டியமைக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல்வாதிகள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் தமது கண்டனத்தை தெரிவித்து வந்த நிலையில்,

இன்றைய தினம் குறித்த கட்டடத்தில், ‘யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்’ என பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என்ற பெயரை ஏற்று விடயத்தை சீர்செய்தமைக்கும், தமிழுக்கு முன்னுரிமைகொடுத்து பெயரை எழுதியமைக்கும் நன்றிகளைத் தெரிவித்து, யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் சாய்முரளிக்கு, தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.