வள்ளியம்மை சுப்பிரமணியத்தின் பாட்டி சொன்ன கதைகள் சிறுவர் நூல் வெளியீடு நேற்று இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் சுழிபுரம் கே.ஏ.எஸ் சத்தியமனை நூலகத்தில் நிகழ்வு இடம்பெற்றது.நிகழ்வில் சத்தியமனை நூலக மாணவர்களின் நடன நிகழ்வு இடம்பெற்றது.
தொடர்ந்து சத்தியமனை நூலகத்தின் சிறுவர் பகுதிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.வள்ளியம்மை சுப்பிரமணியத்தின் பாட்டி சொன்ன கதைகள் நூல் வெளியீடும் தொடர்ந்து இடம்பெற்றது.இந்நிகழ்வில் சட்டத்தரணிகள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், அரசியல் பிரமுகர்கள், பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.