யாழ். நீர்வேலி பகுதியில் இடம்பெற்ற விபத்து: பல்கலை மாணவன் உயிரிழப்பு

0
122

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் யாழ்.பல்கலைகழக 1ஆம் வருட கலைப்பிரிவு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மானிப்பாய் – பேம்படி பகுதியை சேர்ந்த ரமேஷ் சகீந்தன் என்ற 22 வயது மாணவனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை குறித்த மாணவர் தனது வீட்டிலிருந்து நீர்வேலி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது வீதியின் குறுக்கே சென்ற நாயுடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது.


விபத்தில் காயமடைந்த மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.