யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகே அவர்களினால் அச்சுவேலி பகுதியில் மிகவும் பின் தங்கிய குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. அச்சுவேலி வடக்கு அந்தோனியார் ஆலயத்தில் வைத்து இந்த பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் ஆலயத்தின் பங்குத்தந்தை மைக்கேல் சௌந்தரராஜன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.