27.8 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

யாழ் வர்த்தக நிலையமொன்றில் திருட்டு

யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் நேற்றைய தினம் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் பருத்தித்துறை நகர் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் திருட்டு இடம் பெற்ற நிலையில் மந்திகையிலும் வர்த்தக நிலையம் ஒன்றில் திருட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது. குறித்த நிலையம் நேற்று காலை வர்த்தக நடவடிக்கைகளுக்காக உரிமையாளரால் திறந்து பார்த்தபோது கூரை பிரிக்கப்பட்டு திருடப்பட்டமை தெரிய வந்தது. சம்பவத்தை அவதானித்த வர்த்தக நிலைய உரிமையாளர் உடனடியாக பருத்தித்துறை போலீஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். குறித்த திருட்டு சம்பவத்தில் சுமார் 70 ஆயிரம் பெறுமதியான உணவு பொருட்கள், மற்றும் பணம் என்பன காணாமல் போயுள்ளதாக முறையிடப் பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமை போலீஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலைமையில் இடம் பெற்று வருகின்றது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles