யுக்ரேனில் ரஷ்யப் படையெடுப்பிலிருந்து 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தப்பித்து அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 24ஆம் தேதி படையெடுப்பு தொடங்கியதிலிருந்து இன்றுவரை சுமார் 40,19,287 யுக்ரேன் மக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஐநா அகதிகள் முகமை கூறியுள்ளது.
23 லட்சத்திற்கும் அதிகமான யுக்ரேன் மக்கள், தற்போது போலாந்து நாட்டில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.