சமாதானத்தின் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக யுக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் யுக்ரைனில் தங்களது துருப்புக்களைக் களத்தில் நிறுத்துவதற்கும் தயாராக இருப்பதாக பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் யுக்ரைனில் நீடித்த அமைதியை நிலைநிறுத்துவது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.ஐரோப்பியத் தலைவர்களுடன் இடம்பெற்ற உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்னதாக பிரித்தானியப் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்ததிற்குப் பின்னர் யுக்ரைனை பாதுகாப்பதில் பிரித்தானியத் துருப்புகள் ஈடுபட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை இந்த வார இறுதியில் பிரித்தானியப் பிரதமர் அமெரிக்க ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.