சிறுபோக செய்கையில் யூரியா உர விநியோகம் தொடர்பிலான முழுமையான கணக்காய்வை மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சின் செயலாளர் ரோஹன புஸ்பகுமாரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
விவசாயிகளுக்கான உர விநியோகத்தின்போது ஏதேனும் குறைபாடுகள் இருந்திருப்பின் அதனை அடுத்த போகத்தில் சரிசெய்து உரியவாறு உரத்தை விநியோகிப்பதே இதன்நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் விவசாயிகளுக்கான உர விநியோகத்தின்போது ஏதேனும் குளறுபடிகள் ஏற்பட்டு இருப்பின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதும் இந்தக் கணக்காய்வின் நோக்கம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உரவிநியோகம் முழுமையாக இடம்பெற்றதன் பின்னர் இந்தக் கணக்காய்வை முன்னெடுக்குமாறு அவர் அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சிறுபோக செய்கைக்கான உரவிநியோகமானது 98சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் இம்மாத இறுதிக்குள் உரம் விநியோகித்து முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.