எதிர்வரும் அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய வேட்பாளராக அதிபர் ரணில் விக்ரமசிங்கவை முன்னிறுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாக குழு இன்று ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அதிபர் தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தலை நடத்தவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது
ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாக குழு ஒன்று கூடியதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன, தலைவர் வஜிர அபேவர்தன, ஐ.தே.க தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.